• About
  • Privacy
  • Contact
Friday, March 31, 2023
முத்தமிழ் மலர்
  • Home
  • திருக்குறள்
  • சமையல்
    • சிறுதானிய உணவு
    • மூலிகை சமையல்
  • பழங்கள்
  • வீடு-தோட்டம்
  • மருத்துவம்
  • பெண்கள்
  • ஜோதிடம்
  • ஆன்மிகம்
  • பொது அறிவு
  • கேலரி
  • நகைச்சுவை
முத்தமிழ் மலர்
No Result
View All Result
Home Thirukural - திருக்குறள்
Kadavual Vazhthu – Arathupaal | 1. கடவுள் வாழ்த்து /அறத்துப்பால்

Kadavual Vazhthu – Arathupaal | 1. கடவுள் வாழ்த்து /அறத்துப்பால்

by admin
March 18, 2021
in Thirukural - திருக்குறள்
0
SHARES
546
VIEWS
Share on FacebookShare on Twitter

அறத்துப்பால்-1 – பாயிரவியல்-1 – கடவுள் வாழ்த்து

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.
விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று – அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, ‘எழுத்து’ எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ‘ஆதிபகவன் முதற்றே’ என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் – தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் – எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் – மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. ‘கொல்’ என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் ‘நற்றாள்’ என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் – மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் – எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ‘ஏகினான்’ என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்” (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் ‘பூமேல் நடந்தான்’ என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் – இடைவிடாது நினைத்தல்).

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மு.வ உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

மு.வ உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

பரிமேலழகர் உரை:
பொறி வாயில் ஐந்து அவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் – பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. ‘கபிலரது பாட்டு’ என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

மு.வ உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

பரிமேலழகர் உரை:
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் – ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது – மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. (“உறற்பால தீண்டா விடுதலரிது” (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு ‘அருமை’ இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

மு.வ உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

பரிமேலழகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், ‘அறஆழி’ அந்தணன் என்றார். ‘அறஆழி’ என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, ‘அதனை உடைய அந்தணன்’ என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், ‘நீந்தல் அரிது’ என்றார். இஃது ஏகதேச உருவகம்.).

குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

மு.வ உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

பரிமேலழகர் உரை:
கோள் இல் பொறியில் குணம் இல – தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை – எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. ‘அணிமா’ வை முதலாக உடையன எனவும், ‘கடை இலா அறிவை’ முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
பரிமேலழகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் – அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், ‘பிறவிப் பெருங்கடல்’ என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).
admin

admin

Related Posts

பால்: அறத்துப்பால்/ குறள் இயல்:  பாயிரவியல் / அதிகாரம்: வான்சிறப்பு.
Thirukural - திருக்குறள்

பால்: அறத்துப்பால்/ குறள் இயல்: பாயிரவியல் / அதிகாரம்: வான்சிறப்பு.

April 5, 2022

பால்: அறத்துப்பால்/ குறள் இயல்: பாயிரவியல் / அதிகாரம்: வான்சிறப்பு. குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மு.வரதராசனார் உரை: மழை...

Thirukural Adhikaram in Tamil
Thirukural - திருக்குறள்

Thirukural Adhikaram in Tamil

March 8, 2022

Thirukural Adhikaram in Tamil | திருக்குறள் அதிகாரம்

Thirukural Paal categories – திருக்குறள் பால்கள்
Thirukural - திருக்குறள்

Thirukural Paal categories – திருக்குறள் பால்கள்

December 5, 2022

 

Next Post
கீரைகளும் அதன் நன்மைகளும்

கீரைகளும் அதன் நன்மைகளும்

27 நட்சத்திரங்களும் மற்றும் 12 இராசி  பற்றி விளக்கம்

27 நட்சத்திரங்களும் மற்றும் 12 இராசி பற்றி விளக்கம்

பால்: அறத்துப்பால்/ குறள் இயல்:  பாயிரவியல் / அதிகாரம்: வான்சிறப்பு.

பால்: அறத்துப்பால்/ குறள் இயல்: பாயிரவியல் / அதிகாரம்: வான்சிறப்பு.

About Me

முத்தமிழ் மலர்

முத்தமிழ் மலர்

தமிழர் குடி, குலம், பாரம்பரியம்

முத்தமிழ் மலர் இணையதளத்தில் உடல்நலம், அழகு, ஜோதிடம், பொது அறிவு, சமையல், பெண்கள் வாழ்க்கை முறை, ஃபேஷன், வீடு மற்றும் தோட்டம், கர்ப்பம் மற்றும் பெற்றோர் மற்றும் பலவற்றின் வகைப்பாடுகள் உள்ளன. பல்வேறு வாழ்க்கை முறை சார்ந்த கண்ணோட்டங்களைப் பற்றிய அறிக்கைகளை மட்டுமே தருகின்றன.

Categories

  • Astrology – ஜோதிடம் (14)
  • Fruits-பழங்கள் (26)
  • Millets – சிறுதானியங்கள் (5)
  • Thirukural – திருக்குறள் (4)
  • ஆன்மிகம் (9)
  • திருக்குறள் பால்கள் (1)
  • பொது அறிவு (1)
  • மூலிகை சமையல் (5)

Popular

பால்: அறத்துப்பால்/ குறள் இயல்:  பாயிரவியல் / அதிகாரம்: வான்சிறப்பு.

பால்: அறத்துப்பால்/ குறள் இயல்: பாயிரவியல் / அதிகாரம்: வான்சிறப்பு.

12 months ago
27 நட்சத்திரங்களும் மற்றும் 12 இராசி  பற்றி விளக்கம்

27 நட்சத்திரங்களும் மற்றும் 12 இராசி பற்றி விளக்கம்

1 year ago
கீரைகளும் அதன் நன்மைகளும்

கீரைகளும் அதன் நன்மைகளும்

1 year ago
Kadavual Vazhthu – Arathupaal | 1. கடவுள் வாழ்த்து /அறத்துப்பால்

Kadavual Vazhthu – Arathupaal | 1. கடவுள் வாழ்த்து /அறத்துப்பால்

2 years ago

முத்தமிழ் மலர் - தமிழர் குடி, குலம், பாரம்பரியம்

முத்தமிழ் மலர் இணையதளத்தில் உடல்நலம், அழகு, ஜோதிடம், பொது அறிவு, சமையல், பெண்கள் வாழ்க்கை முறை, ஃபேஷன், வீடு மற்றும் தோட்டம், கர்ப்பம் மற்றும் பெற்றோர் மற்றும் பலவற்றின் வகைப்பாடுகள் உள்ளன. பல்வேறு வாழ்க்கை முறை சார்ந்த கண்ணோட்டங்களைப் பற்றிய அறிக்கைகளை மட்டுமே தருகின்றன.

மேலும் வாசிக்க

Popular Posts

Thirukural Paal categories – திருக்குறள் பால்கள்

Thirukural Paal categories – திருக்குறள் பால்கள்

December 5, 2022
ஆல்பக்கோடா பழம் பயன்கள் –  Alpakoda Pazham

ஆல்பக்கோடா பழம் பயன்கள் – Alpakoda Pazham

December 3, 2020
காவடியாம் காவடி – முருகன் பாடல்

காவடியாம் காவடி – முருகன் பாடல்

December 3, 2020

Categories

  • Astrology – ஜோதிடம்
  • Fruits-பழங்கள்
  • Millets – சிறுதானியங்கள்
  • Thirukural – திருக்குறள்
  • ஆன்மிகம்
  • திருக்குறள் பால்கள்
  • பொது அறிவு
  • மூலிகை சமையல்

DISCLAIMER:

Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. On the off chance that you are taking drugs for any sickness, we unequivocally encourage you to proceed with the prescription and follow your Doctor guidance. We are not a specialist or advancing specialists. We are not liable for any symptoms | side effects, responses in your body straightforwardly or in a roundabout way any other fiscal or non-monetary related misfortunes brought about in utilizing/attempting the articles, videos, recordings or tips from this site.
  • About
  • Privacy
  • Contact

© 2021 முத்தமிழ் மலர் - தமிழர் குடி, குலம், பாரம்பரியம்

No Result
View All Result
  • Home
  • திருக்குறள்
  • சமையல்
    • சிறுதானிய உணவு
    • மூலிகை சமையல்
  • பழங்கள்
  • வீடு-தோட்டம்
  • மருத்துவம்
  • பெண்கள்
  • ஜோதிடம்
  • ஆன்மிகம்
  • பொது அறிவு
  • கேலரி
  • நகைச்சுவை

© 2021 முத்தமிழ் மலர் - தமிழர் குடி, குலம், பாரம்பரியம்