ஹோரை பற்றிய விளக்கம்
தினசரி ஒரு மணிநேரத்துக்கு ஒரு ஹோரை வீதம் சூரியன் சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஏழு ஹோரைகள் உண்டு. தினசரி அன்றைக்கு என்ன கிழமையோ அந்த கிழமைக்குரிய கிரகத்துக்குரிய ஹோரைதான் காலையில் முதலில் வரும். அதாவது ஞாயிறு அன்று காலை மணி.00 முதல் 7.00 வரை சூரிய ஹோரையாகும். அதன்படி, திங்கட் கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சந்திரன் ஹோரையா கும். அது போல புதன் கிழமை பு தன் ஹோரையிலும், வியாழக்கிழைமை குரு ஹோரையிலும், வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையிலும் சனிக்கிழமை சனி
ஹோரையிலும் ஆரம்பமாகும். இதில் வியாழன், புதன், சுக்கிரன், வளர்பிறையில் சந்திரன் ஹோரைகளில் சுபகாரியம் செய்ய உத்தமம்.
சுபகாரியங்கள் செய்ய
ஒரு நாளைக்கு 16 முகூர்த்தம் உண்டு. ஒரு முகூர்த்தம் 1.30 மணி நேரமாகும். உத்தி, அமிர்தம், லாபம், தனம், சுகம், உத்திஎன்ற வேலைகளில் சுபகாரியம் செய்யலாம். மற்ற நேரங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது. இராகு காலம், எமகண்டம் என்று போட்டிருக்கும் நேரங்களிலும் சுப காரியங்கள் செய்யக்கூடாது.