செம்பருத்திப் பூ பொடி – மூலிகை சமையல்
தேவையான பொருட்கள்
ஒற்றைச் செம்பருத்தி
(ஒருவாரம் நிழலில் காய வைத்தத) – 25
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 5
புளி – 1 நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் அதில் துவரம் பருப்பு, மிளகாய் இரண்டையும் வறுக்கவும். நிழலில் காய்ந்த பூவையும் வெறும் வாணலியில் வறுக்கவும். இவைகளுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். சூடான சாதத்தில் சிறிது நெய்விட்டு இந்தப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இருதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
இந்தப் பொடி ரத்த விருத்தியும் உண்டாக்கும்.